சினிமாவில் அதிகார மையம் கிடையாது: மனம் திறந்தார் மம்முட்டி


மலையாள சினிமாவில், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து வெளிப் படையாகப் பேசி வருகின்றனர். இதுகுறித்து மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் அமைதி காப்பது ஏன் என்ற கேள்விகள் எழுந்தன. நடிகர் மோகன்லால் நேற்று முன்தினம் இதுபற்றி பேசினார். மம்முட்டி, தனது பேஸ்புக் பதிவில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நேற்று கூறியுள்ளார்.

அதில் அவர், “சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. அதன் அனைத்து நல்ல மற்றும் கெட்ட விஷயங்களும் படத்தில் இருக்கின்றன. சமூகம் உன்னிப்பாகக் கவனிக்கும் துறைகளில் ஒன்று திரையுலகம். அங்கு நடக்கும் சிறிய விஷயங்கள் கூட பெரிய விவாதமாக மாறும். அதில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கத் திரைத் துறையினர் கவனத்துடன் இருக்க வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை முழு மனதுடன் வரவேற்கிறோம். அதைச் செயல்படுத்த அனைத்து திரைத்துறை சங்கங்களும் கைகோர்க்க வேண்டிய தருணம் இது.

ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவம் நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்டனைகளை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். சினிமாவில் அதிகார மையம் என்பது கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

x