‘வேட்டையன்’ படத்தின் டப்பிங்: தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த்!


சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்திற்கான டப்பிங் தொடங்கியிருக்கிறார்.

’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்’. அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார்.

ரஜினியின் 170வது படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில், நீண்ட நாட்கள் கழித்து அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்திருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ரஜினி. கேரளா, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை, மும்பை உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது. காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி.

’குறி வைச்சா, இரை விழனும்’ என ‘வேட்டையன்’ டீசரில் இடம்பெற்றிருக்கும் வசனத்தோடு ரஜினி டப்பிங் பேசும் வீடியோ காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

x