ஆண் நடிகர்களுக்கும் பாலியல் தொல்லை - மலையாள இயக்குநர் ரஞ்சித் மீது அடுத்த குற்றச்சாட்டு!


திருவனந்தபுரம்: மலையாள இயக்குநர் ரஞ்சித் மீது பெண் நடிகைகள் மட்டுமல்லாது, ஆண் நடிகர்களும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

மித்ரா கலாசித்ரா அகாடமியின் தலைவர் பதவியில் இருந்த இயக்குநர் ரஞ்சித் மீது கடந்த வாரத்தில் நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். படத்தின் ஆடிஷனில் கலந்து கொள்ள வந்த தன்னிடம் அவர் அத்துமீறி நடக்க முயன்றதாக கூறினார். ஆனால், படத்தில் வாய்ப்பு தராத கோபத்தில்தான் அந்த நடிகை இதுபோன்ற குற்றச்சாட்டை தன் மீது வைத்ததாக இயக்குநர் ரஞ்சித் மறுத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை கேரள திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. முக்கிய பொறுப்பில் இருக்கும் பல நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

பெண் நடிகையைத் தொடர்ந்து ஆண் நடிகர் ஒருவரும் இயக்குநர் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். பட வாய்ப்பிற்காக ரஞ்சித்தை அணுகியபோது உடைகளை களையச் சொல்லி தன்னை நிர்வாணப்படுத்தியதாகவும், அதை வீடியோ எடுத்து தன்னுடைய தோழிகளுக்கு அனுப்பி வக்கிரத்தை வெளிப்படுத்தினார் எனவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இதுதொடர்பாக, ரஞ்சித் விசாரணை வளையத்திற்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

x