ரூ. 100 கோடியில் சொகுசு வீடு: முதல் குழந்தையை வரவேற்க தயாரான தீபிகா-ரன்வீர்!


நடிகர்கள் தீபிகா- ரன்வீர் ஜோடி தங்கள் முதல் குழந்தையை வரவேற்கும் விதமாக ரூ. 100 கோடியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி இருக்கிறார்கள்.

பாலிவுட் நடிகர்கள் தீபிகா- ரன்வீர் இருவரும் கடந்த 2018ல் காதல் திருமணம் செய்தனர். கடந்த வருடம் இந்த ஜோடி தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாகவும் அறிவித்தார்கள். அடுத்த மாதம் இந்த ஜோடிக்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில், மும்பை பாந்த்ரா பகுதியில் ரூ. 100 கோடி மதிப்பிலான சொகுசு வீடு ஒன்றை வாங்கி உள்ளனர். இந்த வீடு நடிகர் ஷாருக்கானின் மன்னத் வீடு அருகிலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது.

சுமார் 11,000 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த வீட்டின் 16 - 19 ஆவது மாடி தீபிகா- ரன்வீருக்கு சொந்தமானது. ஜிம், நீச்சல் குளம், மாடி தோட்டம் என சகல வசதிகளும் இந்த வீட்டில் உள்ளது. இதற்கு முன்பு இந்த ஜோடி 2021ல் ரூ. 22 கோடி மதிப்பில் அலிபாக்கில் ஒரு வீடு வாங்கி இருந்தனர். இப்போது தங்கள் முதல் குழந்தை பிறந்ததும் இந்த சொகுசு வீட்டில் குடியேற உள்ளனர்.

x