கூண்டோடு ராஜினாமா செய்த ‘அம்மா’ அமைப்பு: நடிகை பார்வதி விளாசல்!


மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) கூட்டு ராஜினாமா முடிவை நடிகை பார்வதி திருவோத்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் ’அம்மா’ அமைப்பில் இருந்து நடிகர் மோகன்லால் உட்பட 16 செயற்குழு உறுப்பினர்கள் கூட்டு ராஜினாமா கொடுத்திருந்தனர். வுமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC) இன் நிறுவன உறுப்பினராகவும் இருக்கும் நடிகை பார்வதி, இதனை கடுமையாக விமர்சித்து, அவர்களை கோழைகள் என்று கூறியிருகிறார். அவர் நடிகர் மோகன்லாலின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் இந்த ராஜினாமா, பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல் என்றும் கூறினார்.

“இந்த கூட்டு ராஜினாமா பற்றிய செய்தியைக் கேட்டதும், ஊடகங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இருந்து அவர்கள் விலகிச் செல்வது எவ்வளவு கோழைத்தனமானது என்று தான் தோன்றியது. இதுபற்றிய உரையாடல்களையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு மீண்டும் பெண்கள் மீது விழுந்துள்ளது. குறைந்தபட்சம் மாநில அரசுடன் இணைந்து ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தையாவது அவர்கள் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று பார்வதி ஆவேசமாக பேசியிருக்கிறார்.

x