அம்மா அமைப்பு உதவியாக இருக்காது: நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி பகீர்!


அம்மா அமைப்பு தனக்கு உதவியாக இருக்காது என்பதால் அதில் சேரவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி கூறியிருக்கிறார்.

’ஜகமே தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’ உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா லெட்சுமி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். படங்களையும் தயாரித்து வருகிறார். ஐஸ்வர்யா லெட்சுமி. இப்போது கேரளத் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ஹேமா கமிட்டி குறித்து அவர் பரபரப்பான கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா தெரிவித்திருப்பதாவது, “இதுபோன்ற பல பிரச்சினைகளில் அம்மா அமைப்பு எனக்கு உதவியாக இருக்காது என்று தெரிந்ததால் தான் அதில் உறுப்பினராக நான் சேரவில்லை. பாலியல் தொடர்பாக இப்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்பதற்காகதான் அதில் இருந்து நழுவவே ‘அம்மா’ அமைப்பின் நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.

திரைத்துறையை மேம்படுத்த வேண்டும் என்ற நினைப்பு கொண்டவர்களே அம்மா அமைப்பில் பதவிக்கு வர வேண்டும். குறிப்பாக, பெண்கள் உயர் பதவிக்கு வர வேண்டும்” எனவும் அவர் கூறியிருக்கிறார்.

x