இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!


சென்னை: இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க நடிகர் சண்முக பாண்டியன் ஒப்பந்தமாகியுள்ளார்.

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பின்பு, ’மதுரை வீரன்’ என்ற படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் இவருக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை. இப்போது ‘படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இந்த நிலையில், தனது அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சண்முக பாண்டியன்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’சீமராஜா’ போன்ற படங்களை இயக்கிய பொன்ராமுடன் தனது அடுத்தப் படத்தை அறிவித்து இருக்கிறார் சண்முக பாண்டியன். சண்முக பாண்டியனுடன் நடிகர் சரத்குமாரும் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 25 அன்று அவரது நினைவிடத்தில் ஆசி பெற்று இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

x