'கொட்டுக்காளி’ படத்துக்கு சிவகார்த்திகேயன் செய்தது வன்முறை: இயக்குநர் அமீர் பேச்சு!


’கொட்டுக்காளி’ படத்தை தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் திரையரங்குகளில் வெளியிட்டது வன்முறை என இயக்குநர் அமீர் பேசியியுள்ளார்.

‘கூழாங்கல்’ பட இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் பலர் பாராட்டி வந்தாலும் படத்தைச் சுற்றி பல விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

இந்தப் படம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் அமீர், “நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக இந்தப் படத்தை ‘வாழை’ படத்துடன் திரையரங்குகளில் வெளியிட்டது தவறு. கமர்ஷியல் லாபத்திற்காக படத்தின் இயக்குநரை வெட்டுவேன், குத்துவேன் எனப் பலரும் கொந்தளிக்கும் அளவுக்கு செய்து விட்டார்.

ஒருவேளை ‘கொட்டுக்காளி’ படத்தை நான் தயாரித்து இருந்தால் ஓடிடியில் விற்று இருப்பேன். பார்க்க வேண்டும் என விரும்பும் ரசிகர்கள் பார்க்கட்டும். வேண்டாம் என சொல்பவர்கள் விட்டுவிடட்டும் என நினைத்திருப்பேன். ஒரு நல்ல படைப்பாளியை இந்த அளவுக்கு யாரும் திட்ட விட்டிருக்க மாட்டேன்” எனக் கூறியிருக்கிறார்.

x