கதையின் நாயகனாக புகழ் நடிக்கும் ஃபோர் சிக்னல்


சென்னையில் ஷேர் ஆட்டோவில் செல்லும் பயணிகளுக்கும் அதன் ஓட்டுநருக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள படம், ‘ஃபோர் சிக்னல்'. ஸ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக் ஷன்ஸ் சார்பில் ஆர்.எஸ்.மணிகண்டன், மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்கின்றனர்.

கதையின் நாயகனாக புகழ் நடித்துள்ளார். ‘அருவி’ திருநாவுக்கரசு, கல்லூரி வினோத், ஷர்மிளா, விஜய் ஆதிராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஜே.அலி மிர்சாக் இசையமைத்துள்ளார்.

மனிதர்களின் அந்தரங்க உணர்வுகளையும் யதார்த்தங்களையும் உள்ளடக்கிய ரொமான்ஸ் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்குப் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேஸ்வரன்கேசவன் இயக்கியுள்ள இந்தப் படத்தைத் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

x