நடிகை மஞ்சு வாரியரிடம் ரூ. 5.75 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்த நடிகை!


நடிகை மஞ்சு வாரியரிடம் ரூ. 5.75 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நடிகை மஞ்சு வாரியர் ‘ஃபுட்டேஜ்’ என்ற படத்தை மலையாளத்தில் தயாரித்துள்ளார். இதில் மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ஷீதல் தம்பியும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் அவர் நடித்தபோது எதிர்பாராத விதமாக அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால், எர்ணாகுளத்தில் ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட ஷீதல் பல மாத சிகிச்சைக்குப் பின்பு நலமுடன் திரும்பி இருக்கிறார். ’ஃபுட்டேஜ்’ திரைப்படம் இந்த வாரம் வெளியாகி இருக்கும் நிலையில் மஞ்சு வாரியர் மீது ஷீதல் வழக்கு ஒன்று பதிவு செய்திருக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் நடித்த போது தயாரிப்பாளராக மஞ்சு வாரியர் உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றும் காலில் பட்ட அடியால் தன் வாழ்நாள் முழுவதும் பாதிப்பு இருக்கும் என்றும் இதனால் தன் திரையுலக வாழ்வே கேள்விக்குறியாகி இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். இதனால், மஞ்சு வாரியர் ரூ. 5.75 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று அவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்.

x