முதல் வரலஷ்மி நோன்பு: திருமணமானதை உறுதி செய்த சீரியல் நடிகை!


சின்னத்திரை நடிகை சரண்யா தனக்குத் திருமணம் ஆனதை உறுதி செய்திருக்கிறார்.

செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் சரண்யா. அதன்பிறகு, சின்னத்திரையில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘ரன்’ போன்ற சீரியல்களில் நடித்தார். இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்2’ சீரியலில் தங்க மயிலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ராகுல் என்பவரைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார். ராகுலுடன் தொடர்ச்சியாகப் புகைப்படங்கள் பகிர்வது, அவருடன் டிராவல் செய்வது என்றிருந்தார் சரண்யா. ‘எப்போது கல்யாணம்?’ எனக் கேட்டு வந்தவர்களுக்கு ஸ்வீட்டான நியூஸாக தனக்குத் திருமணம் ஆனதை உறுதி செய்திருக்கிறார்.

தனது சமூகவலைதளப் பக்கத்தில் நேற்று வரலஷ்மி நோன்பு கொண்டாடிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் கழுத்தில் தங்கதாலி, நெற்றி வகிடில் குங்குமம் என இருப்பவர், ‘முதல் வரலஷ்மி நோன்பு’ எனக் கூறி கணவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார். இதனால், ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை இந்த ஜோடிக்குக் கூறி வருகின்றனர்.

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official)

x