தேசிய விருதை புனித் ராஜ்குமாருக்கு சமர்ப்பித்த நடிகர் ரிஷப் ஷெட்டி!


நடிகர் ரிஷப்ஷெட்டி ‘காந்தாரா’ படத்திற்காக அறிவிக்கப்பட்ட தேசிய விருதை மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ளார்.

நேற்று நாட்டின் எழுபதாவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த நடிகருக்கான விருது ‘காந்தாரா’ படத்தில் நடித்ததற்காக ரிஷப் ஷெட்டிக்கு வழங்கப்பட்டதுடன், கன்னட மொழியில், சிறந்த படமாக ‘காந்தாரா’ தேர்ந்தெடுக்கப்பட்டது. திரையுலகினரும் ரசிகர்களும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். விருது வாங்கியது பற்றிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரிஷப் ஷெட்டி, இந்த விருதை மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசுகையில், “இந்த விருதை நான் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் மற்றும் கன்னட சினிமா ரசிகர்களுக்கும் நடனக் கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். ’காந்தாரா’ படக்குழுவுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. விருது அறிவிக்கும் போது என்னுடைய உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கன்னட சினிமா பெரியளவில் வளர்ந்து வருகிறது. அதனால் தான், இந்த விருதும் கிடைத்திருக்கிறது. இந்த விருது எனக்கான பொறுப்பை இன்னும் அதிகமாக்குகிறது” என்றார்.

x