'எமெர்ஜென்சி’ படத்துக்குப் பின் நடிப்பை கைவிடும் கங்கனா?


மும்பை: நடிகை கங்கனா ‘எமெர்ஜென்சி’ படத்திற்குப் பிறகு நடிப்பைக் கைவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகை கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள ‘எமெர்ஜென்சி’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடந்திருக்கிறது. அதில் ‘எமெர்ஜென்சி’ படத்திற்குப் பிறகு கங்கனா நடிப்பைக் கைவிடுகிறாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் சொல்லி இருக்கிறார். “இந்தப் படத்திற்குப் பிறகு நான் நடிக்கிறேனா இல்லையா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நான் இதற்கு முன்பு லீடர் ஆக வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், அதை மக்கள் முடிவு செய்து என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். கட்சியில் சேர வேண்டும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது என எல்லாமே மக்கள் விருப்பம்தான்.

‘எமெர்ஜென்சி’ படம் வெளியாகி வெற்றி பெற்று மக்கள் என்னைத் திரையில் தொடர்ந்து நடிகையாக பார்க்க விரும்பினால், நிச்சயம் நான் நடிப்பைத் தொடர்வேன். இல்லை எனில் அரசியலில் மக்கள் பணி செய்வேன்” எனக் கூறியிருக்கிறார்.

x