'GOAT' படத்தின் கதை இதுதான்: இயக்குநர் வெங்கட்பிரபு பகிர்ந்த சுவாரஸ்யம்!


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'GOAT' படத்தின் கதை பற்றி இயக்குநர் வெங்கட்பிரபு பகிர்ந்துள்ளது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'GOAT' திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படம் பற்றி இயக்குநர் வெங்கட்பிரபு சமீபத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், 'GOAT' படத்தின் கதை பற்றிய சுவாரஸ்யத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில் பேசிய அவர், “இந்தப் படம் உண்மைக் கதையைத் தழுவி எடுத்திருக்கிறோம் என சொல்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை. கற்பனையான கதை தான். ‘ரா’ அமைப்புக்கு நெருக்கமாக இருக்கும் அமைப்பில் சிலர் செய்த வேலைகள் பின்னாளில் அவர்களுக்கு எப்படி பிரச்சினையாக மாறுகிறது, அதை அவர்கள் எப்படி சந்தித்து வெல்கிறார்கள் என்பது தான் கதை.

நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு படம் பிடித்ததாக இருக்கும். படத்தில் பல சர்ப்ரைஸ் ரசிகர்களுக்குக் காத்திருக்கிறது. ‘மங்காத்தா’ படம் செய்யும்போதே, விஜய்யை வைத்து படம் செய்ய வேண்டும் என அஜித் சார் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

'GOAT' படம் பற்றிய அறிவிப்பு வந்த போதே அஜித் சார் என்னிடம் ‘மங்காத்தா’ படத்தை விட 100 மடங்கு நன்றாக வர வேண்டும் எனக் கூறியிருந்தார். அவர் சொன்னதை நான் செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். இனி படம் பார்த்து விட்டு மக்கள் தான் சொல்ல வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

x