நித்யாமேனனுக்கு நன்றி : நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி!


’திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனது கதாபாத்திரத்தை அழகாக காண்பிக்க உதவியதற்காக நடிகை நித்யா மேனனுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றது. இதில் நடிகர் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவருக்கும் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நடிகர் தனுஷ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார்.

அதில், “ஒரு படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயினுக்கு ஒரே சமயத்தில் சிறந்த நடிகர், நடிகைக்கான விருது கிடைப்பது அரிது. திருவும், ஷோபனாவும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். திருவை நன்றாக காண்பிக்க உதவியதற்காக ஷோபனாவுக்கு நன்றி” என தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனுஷ் நடித்து, இயக்கிய ‘ராயன்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அடுத்து ‘குபேரன்’,’ இளையராஜா’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன.

x