மகன்களுடன் செம க்யூட்டான படங்கள் பகிர்ந்த நயன்தாரா!


சென்னை: நடிகை நயன்தாரா தனது மகன்களுடன் செம க்யூட்டான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை நயன்தாரா தனது மகன்கள் உலக் மற்றும் உயிருடன் ரிலாக்ஸாக இருக்கும் புகைப்படங்களைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’நான் வேலைக்கு செல்லும் முன்பாக கொஞ்ச நேரம் கிடைக்கும் அன்பு’ எனவும் கேப்ஷன் கொடுத்து உருகியுள்ளார். தனது மகன்களுடன் கியூட்டான தருணங்களை புகைப்படம் எடுத்து அதைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார் நயன்தாரா.

'அன்னபூரணி’ படத்திற்குப் பிறகு ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’, ‘மூக்குத்தி அம்மன்2’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார் நயன். முதலில் ‘மூக்குத்தி அம்மன்2’ படத்தில் இவருக்குப் பதிலாக த்ரிஷா நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், நயன்தாரா தான் நடிக்கிறார் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இப்போது சமீபத்திய தகவலின்படி, ஆர்.ஜே. பாலாஜி இந்தப் படத்தை இயக்குவதில் இருந்து விலகிவிட்டார் எனவும், அவருக்குப் பதிலாக இயக்குநர் சுந்தர்.சி இயக்குவார் எனவும் சொல்லப்படுகிறது. இதனை விரைவில் படக்குழு உறுதி செய்யும் என எதிர்பார்க்கலாம்.

x