நாகசைதன்யா- ஷோபிதா அவசர நிச்சயதார்த்தம் ஏன்? - நாகர்ஜூனா விளக்கம்


ஹைதராபாத்: நடிகர் நாகசைதன்யாவுக்கும் ஷோபிதாவுக்கும் அவசரமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக நெட்டிசன்கள் பலரும் சொல்லிய நிலையில், அதற்கு நாகர்ஜூனா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நடிகர் நாகசைதன்யாவுக்கும் நடிகை ஷோபிதாவுக்கும் கடந்த எட்டாம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதனை நடிகர் நாகர்ஜூனா தனது சமூகவலைதளப் பக்கத்தில் புகைப்படங்களோடு அறிவித்தார். இவர்களின் நிச்சயதார்த்த செய்தியை இவ்வளவு ரகசியமாக வைத்திருந்தது ஏன், அவசர அவசரமாக நிச்சயதார்த்தம் செய்ய வேண்டியது ஏன் என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதற்கு நடிகர் நாகர்ஜூனா விளக்கம் கொடுத்துள்ளார். அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், “எட்டாவது மாதம் எட்டாம் தேதி என்பது மிகவும் ராசியான தேதி. அதை தவற விடக்கூடாது என்று நினைத்தோம். அதனால்தான், நாங்கள் அந்தத் தேதியை முடிவு செய்தோம். திருமண தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அதுபற்றியும் அறிவிப்போம்.

நாகசைதன்யாவும் ஷோபிதாவும் கடந்த இரண்டு வருடங்களாகப் பழகி வருகின்றனர். ஷோபிதாவை எங்கள் குடும்பத்திற்கு முன்பே தெரியும். நல்ல பெண் அவர். அவரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று பேசியுள்ளார்.

x