படப்பிடிப்பில் சூர்யா காயம்


நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்றது. 2-ம் கட்டப் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

அங்குள்ள ‘நவாநகர் பேலஸ்’ என்றஇடத்தில் நேற்று முன் தினம் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

லேசான காயம் என்பதால் சிறிது ஓய்வுக்கு பின் படப்பிடிப்பில் சூர்யா மீண்டும் கலந்து கொண்டார். இந்நிலையில், “அது லேசான காயம்தான். சூர்யா நன்றாக இருக்கிறார்” என்று 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

x