பள்ளிப்பட்டு அருகே பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிலை திறப்பு


திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள கோணேட்டம்பேட்டை கிராமம், மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குடும்பத்தின் பூர்வீக கிராமமாகும்.

அங்குள்ள அவரது வீட்டில் எஸ்பி. பாலசுப்பிரமணியத்தின் 4 அடி உயரம் கொண்ட மார்பளவு பால்நிற கற்சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில், எஸ்பிபியின் மனைவி சாவித்திரி, தங்கை திரைப்பட பின்னணி பாடகி எஸ்.பி. சைலஜா, அவரது கணவர் சுதாகர், உறவினர் பானுமூர்த்தி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்று எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

x