உறவினர்களால் தாக்கப்பட்டேன்: நடிகர் சத்யராஜ் மகள் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!


தன்னுடைய சிறுவயதில் உறவினர்களால் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பற்றி நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் பகிர்ந்துள்ளார்.

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். இவர் தொடர்ச்சியாக சமூகவலைதளங்களில் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். இதோடு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ‘மகிழ்மதி’ என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து அதன் மூலம் உணவு கொடுத்து வருகிறார்.

தனது சமூகவலைதளப் பக்கத்தில் தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார் திவ்யா, ‘எனக்கு முன்பு கோயம்புத்தூர் என்றால் பயமாக இருக்கும். ஏனெனில், நான் வளர்ந்த விதம் பற்றி என்னுடைய உறவினர்கள் சிலரே அவமானப்படுத்தினார்கள். ஒருநாள் என்னை அடிப்பதற்காக ஒருவனை வரவழைத்தார்கள். அந்த சமயத்தில் எனக்கு மாதவிடாய் இருந்ததால் அதிக அளவிலான இரத்தப்போக்கு நேர்ந்தது. என்னுடைய மொபைலையும் அப்போது இழந்துவிட்டேன். இதில் இருந்து தப்பித்து நான் சென்னை வந்துவிட்டாலும் அந்த சம்பவம் கொடுத்த அதிர்ச்சி மற்றும் மன அழுத்தத்தில் இருந்து நான் வெளியே வரவில்லை. அப்பாவுக்கும் இதில் அதிகம் கோபம்.

ஆனால், இலங்கையில் உள்ள பல தமிழ் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பார்க்கும்போது என்னுடைய பிரச்சினை பெரிதில்லை என்று தோன்றுகிறது. எந்தப் பெண் தனக்காக நிற்கிறாரோ நிச்சயம் அவர் பாதிக்கப்பட்ட பிற பெண்களுக்கும் நிற்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

மதம் மனிதர்களைப் படுகொலை செய்கிறது, காதலை அழிக்கிறது, பெண்களை இழிவுப்படுத்துகிறது. இப்படியான மதங்களுக்கு எதிராகவும் சமூக அநீதிகளுக்கு எதிராகவும் நான் நிச்சயம் போராடுவேன். எனக்கு நேர்ந்த காயங்கள் ஆறப்போவதில்லை. ஆனால், நிச்சயம் நான் மீண்டும் கோயம்புத்தூர் செல்வேன். எனது அன்பைத் தருவேன்’ எனக் கூறியிருக்கிறார்.

A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)

x