நிச்சயதார்த்தம் முடிந்தது... புகைப்படங்களை வெளியிட்ட நாகர்ஜூனா!


நடிகர்கள் நாக சைதன்யாவுக்கும் ஷோபிதாவுக்கும் இன்று காலை நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

நடிகர் நாக சைதன்யா- சமந்தா ஜோடி கடந்த 2021ல் தங்கள் விவாகரத்தை அறிவித்தார்கள். அதன் பிறகு இருவரும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தனர்.

விவாகரத்துக்குப் பின்னர், நடிகை ஷோபிதா துலிபலாவை நடிகர் நாக சைதன்யா டேட் செய்கிறார் என இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் கசிந்தது. இதுபற்றி இருவருமே உறுதிப்படுத்தாமல் மெளனம் காத்து வந்த நிலையில், இன்று காலை இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடக்க இருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகர் நாகர்ஜூனா அவரது சமூகவலைதளப் பக்கத்தில் இருவரின் புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘என் மகன் நாக சைதன்யாவுக்கும் ஷோபிதா துலிபலாவுக்கும் இன்று காலை 9.42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம். ஷோபிதாவை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. வாழ்நாள் முழுவதும் இவர்களுக்கு அன்பும் காதலும் இருக்க எங்கள் வாழ்த்துகள்! முடிவில்லாத காதலின் தொடக்கம்’ எனக் கூறியுள்ளார்.

சமந்தா தனது காதலை நாக சைதன்யாவுக்கு வெளிப்படுத்திய நாள் இதே ஆகஸ்ட் 8. அதே நாளில் ஷோபிதாவுடன் நிச்சயதார்த்தம் முடித்துள்ள நாக சைதன்யா என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

x