அவர் என்ன என் மாமனா... மச்சானா... பிக் பாஸ்7 வீட்டில் தொடங்கிய முதல் சண்டை


பிக் பாஸ்7

பிக் பாஸ்7 தமிழ் நிகழ்ச்சியில் முதல் சண்டை ஆரம்பித்து இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் மூன்றாவது நாளில் அதிரடியாக சில சண்டைகள், வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீடு இரண்டாகப் பிரிந்து, போட்டியாளர்களுக்குள் நாமினேஷன் புராசஸ் தொடங்கியது. மேலும், தற்போது பிக் பாஸ் கொடுத்து வரும் அடுத்தடுத்த டாஸ்க்கும் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

பிக் பாஸின் முதல் கேம் இப்போது விளையாடப்படுகிறது. ’Know Your House Mate’ எனும் பெயரில் இந்த டாஸ்க் நடக்கிறது. இதில் போட்டியாளர்கள் தலா ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் குறித்த 6 தகவல்கள் போர்டில் எழுதப்பட்டிருக்கும். அதில் சரியானவற்றைக் கண்டுபிடித்து அதைப் பற்றி போட்டியாளர்கள் கூற வேண்டும்.

அந்த வகையில், இன்று வெளியான முதல் புரோமோவில் ’Know Your House Mate’ விளையாட்டு தொடர்ந்து விளையாடப்படுகிறது. அதில் மாயா கிருஷ்ணன் முதலில் பேசுகிறார். அவர் தான் கமல்ஹாசன் சாருடன் நடித்திருக்கிறேன் என்று கூறுகிறார். கையில் 495K என எழுதப்பட்டுள்ள சிலேட் ஒன்றைப் பிடித்திருக்கிறார்.

மறுபுறம் விஷ்ணு சில கேள்விகளை அடுக்கி வைக்கிறார். அவருக்கு மாயாவுக்கும் போட்டி என்பதை குறிக்கும் வகையில் மாயா Vs விஷ்ணு என விளையாட்டு ஆரம்பமாகிறது. அப்போது பிரதீப் குறித்த பேச்சு வர, மாயா, அவன் என்ன என் மாமனா மச்சானா என கொந்தளிக்கிறார். இதைக் கேட்டதும் பிரதீப்பின் முகம் மாறுகிறது.

கடைசியாக விசித்ரா, விஷ்ணுவிடம் எச்சரிக்கை விடுக்கிறார். இந்தமுறை நிறைய பேரின் பர்சனல் விசயங்களை விஷ்ணு பேசியதாக அவர் கூறுகிறார். இந்த புரோமோவைப் பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டில் முதல் சண்டை ஆரம்பித்து விட்டதாகக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

x