திருமணம் செய்ய சோம்பேறித்தனம்: நடிகை ப்ரியா பவானி ஷங்கர்!


திருமணம் செய்ய சோம்பேறித்தனமாக இருப்பதாக நடிகை ப்ரியா பவானி ஷங்கர் கூறியிருக்கிறார்.

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையான ப்ரியா பவானி ஷங்கர் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ப்ரியா பவானி ஷங்கர், அருள்நிதி உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘டிமாண்டி காலனி2’ வரும் ஆக்ஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் புரோமோஷனுக்காக கொடுத்தப் பேட்டி ஒன்றில் தனது திருமணம் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். ”திரைத்துறையில் உள்ள எனது நண்பர்களுக்கு முன்பெல்லாம் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி புகைப்படம் பகிர்ந்தாலே உடனே அவர்களுடன் சேர்த்து வைத்து காதல் கிசுகிசு கிளம்பி விடும். அதிலும் சில மோசமான கமெண்ட்ஸ் எல்லாம் பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமாகி விடும். அதேபோல, என் நீண்ட கால நண்பர் ராஜ் என்பவரை காதலித்து வருகிறேன் என்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறேன்.

இதனால், ’எப்போது திருமணம்?’ என்றும் கேட்டு வருகிறார்கள். உண்மையில், திருமணம் செய்து கொள்ள சோம்பேறித்தனமாக இருக்கிறது. அதனாலேயே இவ்வளவு நாட்கள் திருமணத்தைத் தள்ளி வைத்துக் கொண்டே வந்தோம். ஆனால், இனியும் அப்படி இருக்க முடியாது. அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

x