நடிகர் யஷ் கோயிலில் வழிபாடு: பக்தர்களுடன் சேர்ந்து அன்னதானம் சாப்பிட்டு மகிழ்ந்தார்!


நடிகர் யஷ் குடும்பத்துடன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்.

’கேஜிஎஃப்’ புகழ் நடிகர் யஷ் தனது குடும்பத்துடன் கர்நாடகாவில் மிகப்பழமையான கோயிலான ஸ்ரீ சதாசிவ ருத்ர சூர்யா கோயில், தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கோயில் மற்றும் சுப்ரமண்யாவில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோயில் என பல கோயில்களில் வழிபாடு செய்தார்.

இவருடன் யஷ் தற்போது நடித்து வரும் ‘டாக்ஸிக்’ படத் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா மற்றும் படக்குழுவினரும் சுவாமி தரிசனம் செய்தனர். சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சதாசிவ ருத்ர சூர்யா கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்ததும் அங்குள்ள பக்தர்களுடன் சேர்ந்து அமர்ந்தபடி அன்னதானம் சாப்பிட்டார் யஷ்.

யஷூடன் அவரது மனைவி ராதிகா மற்றும் குழந்தைகளும் இருந்தனர். யஷ் வருகையை அறிந்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க குவிந்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

x