ராஜமவுலி படத்தில் விக்ரம்!


‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராஜமவுலி.

‘இண்டியானா ஜோன்ஸ்’ படம் போல உலக அளவிலான ஆக்‌ஷன் அட்வென்சர் படமாக இது இருக்கும் என்று ராஜமவுலி தெரிவித்திருந்தார். இதில் வில்லனாக நடிக்க விக்ரமுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் ‘தங்கலான்’ பட புரமோஷனில் கலந்துகொண்ட விக்ரமிடம் இதுபற்றி கேட்டபோது, “ராஜமவுலிஎன் நண்பர். அவர் இயக்கத்தில்நடிக்க பேச்சுவார்த்தையில் இருக்கிறேன். எந்த படம்என்பது முடிவாகவில்லை” என்றார். இந்தப் படத்தில் பிருத்விராஜ் வில்லனாக நடிக்க இருப்பதாக ஏற்கெனவே செய்தி வெளியானது

x