சர்ச்சை வளையத்தில் இர்ஃபான்: அபராதம் விதித்தது போக்குவரத்து காவல்துறை


சென்னை: யூடியூபர் இர்ஃபானுக்கு போக்குவரத்து காவல்துறை ரூ.1500 அபராதம் விதித்திருக்கிறது.

சமீப காலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் யூடியூபர் இர்ஃபான். தனக்கு பிறந்த குழந்தையின் பாலினத்தை முன்பே அறிந்து கொண்டு அதை வெளிப்படையாக அறிவித்தது, யூடியூபர் பிரியாணி மேனுடன் எழுந்த மோதல் என சர்ச்சைகளில் மாட்டி வருகிறார். இதில் அடுத்ததாக ஹெல்மெட் மற்றும் முறையான நம்பர் பிளேட் இல்லாமல் பைக் ஓட்டியதால் சென்னை காவல்துறை இவருக்கு அபராதம் விதித்திருக்கிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் இர்ஃபான் தொடர்பான வீடியோ காட்சிகளை சமூகவலைதளத்தில் சென்னைப் போக்குவரத்து காவல்துறையின் கவனத்திற்குக் எடுத்து சென்றுள்ளனர். இதனால், இர்ஃபானுக்கு ரூ. 1500 அபராதம் விதித்திருக்கிறது சென்னை போக்குவரத்து காவல்துறை. சமீபத்தில் நடிகர் பிரஷாந்த் ஹெல்மெட் அணியாமல் சென்று சர்ச்சையில் சிக்கினார். அவருக்கும் இதுபோல அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x