10 வருட காத்திருப்புக்குப் பின் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான சீரியல் நடிகை!


சென்னை: சின்னத்திரை நடிகை ஜூலி பத்து வருட காத்திருப்புக்குப் பின்னர் இரட்டை குழந்தைகளுக்குத் தாயாகி இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

'சித்திரம் பேசுதடி’, ‘சத்யா’ உள்ளிட்டப் பல சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் ஜூலி. நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியிருந்தாலும் இவருக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமான செய்தியை அறிவித்தவர் இத்தனை வருடம் தான் பட்ட கஷ்டமெல்லாம் விலகி விட்டதாகவும் கூறினார்.

இப்போது இவருக்கு ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் நேற்று பிறந்திருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரது வேண்டுதலுக்கும் நன்றி எனக் கூறி தானும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார் ஜூலி.

x