தாமதமாகும் ‘புஷ்பா2’ - ஈகோவால் வெளிநாடு பறந்த அல்லு அர்ஜூன்?!


ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் இந்த வருடம் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம், கடந்த மூன்று வருடங்களாக உருவாகி வருகிறது. இந்தப் படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படப்பிடிப்பிற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்பட்டதால் இந்த வருடம் டிசம்பர் 6ம் தேதிக்கு இதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘புஷ்பா2’ படத்துக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக படப்பிடிப்பைத் தொடர்வதில் குழப்பம் நீடிக்கிறதாம். இதோடு, இயக்குநர் சுகுமார்- அல்லு அர்ஜூன் இடையே ஈகோ பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும் இதனால், ‘புஷ்பா2’ படத்திற்காக வைத்த தாடியை ட்ரிம் செய்துவிட்டு ஸ்பெயின் பறந்திருக்கிறார் அல்லு அர்ஜூன்.

இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் ‘புஷ்பா2’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்படலாம் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

x