இந்திப் படம் இயக்குகிறார் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ சிதம்பரம்


சவுபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உட்பட பலர் நடித்து வெளியான மலையாள படம், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. சிதம்பரம் இயக்கியிருந்தார். கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படம் மலையாளம் தவிர, தமிழ், தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டானது. உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலித்து சாதித்தது. இதை அடுத்து சிதம்பரம் தமிழில் படம் இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் இந்திப் படம் இயக்குகிறார். பிரபல இந்தி பட நிறுவனமான பாண்டம் ஸ்டூடியோஸ் அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுபற்றி சிதம்பரம் கூறும்போது, “எனது முதல் இந்திப்படத்துக்காக பாண்டம் ஸ்டூடியோவுடன் இணைவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

x