அம்பானி வீட்டுத் திருமணத்திற்கு செல்லாத தாப்ஸி: காரணம் இதுதான்!


நடிகை தாப்ஸி அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என மனம் திறந்துள்ளார்.

தொழிலதிபர் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கோலகலமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்து முடிந்தது. இதில் பாலிவுட்டைச் சேர்ந்த ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். ஆனால், நடிகை தாப்ஸி கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி அவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார்.

“அம்பானி குடும்பத்தைத் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. திருமணத்தில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் தனிப்பட்ட உறவு இருக்க வேண்டும் என்று நான் நினைப்பேன்.

அம்பானி குடும்பத்திற்கு நிச்சயம் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் திருமணம் நடப்பவர்களைத் தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே அதுபோன்ற திருமணங்களுக்கு செல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

x