ஆன்மிகம் தான் என் பலம்: நடிகை சமந்தா நெகிழ்ச்சி!


ஆன்மிகம் தான் தனக்கு மிகப்பெரிய பலம் என்று நடிகை சமந்தா மனம் திறந்து கூறியுள்ளார்.

நடிகை சமந்தா ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். இந்த ஆன்மிக ஈடுபாடு பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். சமந்தா.

“கடந்த காலத்தில் நமது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை மாற்ற விரும்புகிறோம். நம்பிக்கை தான் உங்களை முன்னோக்கி கொண்டு செல்கிறது. இப்போது நான் வலுவாக இருக்கக் காரணம் என்னுடைய ஆன்மிக ஈடுபாடுதான். என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும் ஆன்மிகம் பலமாக இருப்பதாக நம்புகிறேன்” என மனம் திறந்து பேசியிருக்கிறார்.

மையோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்து வரும் சமந்தா தற்போது நடிப்பதில் இருந்து சிறிது காலத்திற்கு பிரேக் எடுத்துள்ளார். சீக்கிரம் கம்பேக் கொடுப்பதாக சொல்லியிருப்பவர் மாடலிங், பிசினஸ், ஆன்மிகம், பயணம் என கவனம் செலுத்தி வருகிறார்.

x