கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி மீது வழக்கு


பிரபல கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி. இவர், ‘அவனே ஸ்ரீமன் நாராயணா', ‘777 சார்லி’ படங்களின் மூலம் தமிழுக்கும் வந்தார். இவர் தயாரித்த ‘பேச்சிலர் பார்ட்டி’ என்ற கன்னடப் படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதில் ‘நியாயா எல்லி இதே’, ‘காலிமாத்து’ ஆகிய படங்களில் இருந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன.

இந்தப் பாடல்களின் உரிமை எம்.ஆர்.டி மியூசிக் என்ற நிறுவனத்திடம் உள்ளது. இப்பாடல்களைப் படத்தில் பயன்படுத்துவதற்காக அந்த நிறுவனத்துடன் ரக்‌ஷித் ஷெட்டி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமூக முடிவு ஏற்படவில்லை.இருந்தும் அனுமதியின்றி அந்தப் பாடல்களை ‘பேச்சிலர் பார்ட்டி’ படத்தில் பயன்படுத்தியுள்ளதாக ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் அவரது பரம்வா ஸ்டூடியோஸ் மீது பெங்களூரு போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விளக்கம் கேட்டு ரக்‌ஷித் ஷெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

x