பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்தார் சூர்யா


சென்னை: நடிகர் சூர்யாவுக்கு வரும் 23-ம் தேதி பிறந்த நாள். இதை முன்னிட்டு சூர்யா நற்பணி மன்றம் சார்பில், அவர் ரசிகர்கள் ரத்த தானம் செய்து வருகின்றனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், 400-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேற்று முன்தினம் ரத்த தானம் செய்தனர்.

கடந்த ஆண்டு, சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த ரசிகர்களை நேரில் அழைத்து விருந்தளித்துப் பாராட்டிய சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று அவர் ரத்ததானம் செய்தார்

x