பயோபிக் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா சொன்ன தகவல்!


சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பயோபிக் உருவாவது குறித்த தகவலை பகிர்ந்திருக்கிறார்.

சென்னையில் நேற்று மாலை இளையராஜா இசைக்கச்சேரி நடத்தி இருந்தார். இதில் ஏராளமான ரசிகர்கள் மழையையும் பொருட்படுத்தாது குவிந்திருந்தனர். தன்னுடைய இசையில் வெளியான பல பாடல்களையும், அதுகுறித்தான சுவாரஸ்ய விஷயங்களையும் வழக்கம்போல பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் இளையராஜா. மேலும், தனுஷ் நடிப்பில் தன்னுடைய பயோபிக் உருவாவது பற்றியும் பேசியிருந்தார்.

சிறுவயதில் இசை மீது ஆர்வம் கொண்டு தனது அண்ணனோடும் ஆர்மோனியத்தோடும் மெட்ராஸ் பயணித்த கதையில் இருந்து ஆரம்பித்தார் இளையராஜா. பின்பு அவர் பேசியதாவது, “சில பாடல்களுக்கான இசை எப்படி உருவாகி இருக்கிறது என்பதை நான் சொல்கிறேன். எதோ கிளாஸ் எடுக்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.

ஏனெனில், தனுஷ் நடிப்பில் உருவாகும் என்னுடைய பயோபிக்கிற்காக பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறேன். அவை எல்லாமே, பயோபிக்கில் வருமா என்பது எனக்குத் தெரியாது. இதை எல்லாம் நான் எனக்குள்ளே வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன். என்னைப் பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொண்டால்தானே எனக்கு சந்தோஷம்?” என்று சில பாடல்கள் உருவான விதம் பற்றி ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

x