திருச்செந்தூரில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்!


நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

’அமரன்’ படத்தை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் நடந்து வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பிற்கு இடையே இன்று காலை நடிகர் சிவகார்த்திகேயன் ஆனி வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். ஆனி வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு நடிகர் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் சிவகார்த்திகேயனின் வரவையடுத்து ரசிகர்கள் குவிந்தனர். அவர்களுடன் செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக் கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

x