மூன்றாவது குழந்தைக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்: என்ன பெயர் தெரியுமா?


நடிகர் சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது குழந்தைக்கு பவன் சிவகார்த்திகேயன் எனப் பெயரிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா, குகன் என ஒரு மகளும், மகனும் உள்ள நிலையில், கடந்த மாதம் தனக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தார்.

தனது குழந்தைகள் ஆராதனாவுக்கும், குகனுக்கும் கொடுத்த அன்பும் ஆதரவும் தன்னுடைய மூன்றாவது குழந்தைக்கும் வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தனது மூன்றாவது குழந்தைக்கு பவன் சிவகார்த்திகேயன் எனப் பெயரிட்டுள்ளார். நெருங்கிய உறவினர்களோடு வீட்டிலேயே எளிமையாக இந்த பெயர் சூட்டு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

பெயர் சூட்டும் விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து, தனது மனைவி ஆர்த்தி மூன்று குழந்தைகளையும் பெற்றெடுத்த போது எந்தவிதமான வலியை அனுபவித்தார் என்பதை ஆப்ரேஷன் தியேட்டரில் அருகில் இருந்து பார்த்ததாகக் கூறியுள்ளார். மேலும் அவருடைய வலியை தான் புரிந்து கொள்வதாகவும் இந்த அழகான உலகத்தைத் தனக்கு உருவாக்கிக் கொடுத்ததற்காக என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் எனவும் மனைவி மீதான காதலை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களும் திரையுலகினரும் தங்கள் வாழ்த்துகளை சிவகார்த்திகேயன் குடும்பத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.

x