கொலை வழக்கில் சிறை: மனஉளைச்சலால் எடை குறைந்த நடிகர் தர்ஷன்!


மன உளைச்சல்; ஒரே மாதத்தில் 10 கிலோ எடைக் குறைந்த நடிகர் தர்ஷன்!

ரேணுகா சுவாமி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல கன்னட நடிகர் தர்ஷன், 25 நாட்களில் மன உளைச்சல் காரணமாக 10 கிலோ எடை குறைந்ததாக கூறப்படுகிறது.

கர்நாடகாவின் சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ரேணுகாசுவாமி(33). தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்துவந்த இவர், நடிகர் தர்ஷனுக்கு நெருங்கிய தோழியான பவித்ரா கவுடா என்பவருக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல கன்னட நடிகர் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.

அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதமாகிறது. அவர் வெளியில் இருக்கும் போது ஜிம்மில் உடற்பயிற்சி, நல்ல உணவு என்று இருந்து வந்தார். ஆனால், தற்போது அவரது நிலை அப்படி அல்ல. சிறையில் உள்ள மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளையே அவரும் சாப்பிட வேண்டும் என்று கவலைப்பட்டு வருகிறார். இந்த நிலையில், நான் எப்போது வெளியே வருவேன் என்று எனக்கு கவலையாக உள்ளது. அதனால் சிறையில் சரியாக சாப்பிடுவதில்லை. இதன் காரணமாக அவர் 25 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

x