விஜயகாந்தை ஏ.ஐ.தொழில்நுட்பத்தில் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்: தேமுதிக அறிவிப்பு


நடிகரும், தேமுதிக தலைவருமான மறைந்த விஜயகாந்தை, ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடிக்க வைத்துள்ள தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மேலும் சிலர், விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் தங்கள் படங்களில் காண்பிக்க இருப்பதாகக் கூறி வருகின்றனர். இந்நிலையில், தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுமதியின்றி இது தொடர்பான அறிவிப்பை வெளியிடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “விஜயகாந்தை ஏ.ஐ.தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் அனுமதிப் பெற்ற பின்பே அறிவிக்க வேண்டும். இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை ’ எனக் கூறப்பட்டுள்ளது

x