35 நாளில் சிம்பொனி இசை: இளையராஜா மகிழ்ச்சி


சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா 35 நாளில், சிம்பொனி ஒன்றை எழுதி முடித்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: கடந்த ஒரு மாதமாக என்னை பற்றி நிறைய வீடியோக்கள் வருவதாகக் கேள்விப்பட்டேன். நான் எதையும் பார்க்கவில்லை. மற்றவர்களைக் கவனிப்பது என் வேலையில்லை. நான் என் வழியில் சென்று கொண்டிருக்கிறேன்.

சில நிகழ்ச்சிகள் மற்றும் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே ஒருசிம்பொனியை எழுதி வந்தேன். அதை 35 நாட்களில் முழுமையாக எழுதி முடித்து விட்டேன். எனக்கு இது மிகப்பெரிய சந்தோஷமான விஷயம். இதை என் ரசிகர்களுக்குத் தெரிவித்துக்கொள்ளஆசைப்படுகிறேன். சிம்பொனி என்பது எந்த திரையிசை மற்றும் பின்னணி இசையும் அல்லாத ஒன்று. இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.

x