இருளர் இன மக்கள் நலனுக்காக கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய சூர்யா


தா.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் நாளை (நவ.02) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் பழங்குடி இருளர் இனமக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் பேசப்பட்டுள்ளன. அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இருளர் இன மக்கள் நலனுக்காகத் திரைப்படத்தில் பேசுவதையும் தாண்டி, யதார்த்த களத்திலும் உதவி புரிந்துள்ளார் சூர்யா. இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா - சூர்யா மற்றும் அவர்களின் 2டி படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில், ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க பொறுப்பாளர்கள் இந்த உதவியைப் பெற்றுக் கொண்டனர்.

x