பெங்களூர் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக ‘கட்டில்’ தேர்வு


பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழா, கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த விழாவில் 20 நாடுகளிலிருந்து, 30 மொழிகளில், 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறந்த தென்னிந்தியத் திரைப்படத்துக்கான விருதைத் தமிழில் தயாராகி உள்ள ‘கட்டில்’ திரைப்படம் பெற்றது. திரைப்படத்துக்கான விருதை அதன் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு பெற்றார்.

இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்தில், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படத்துக்கு படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் ஒரு கட்டிலைச் சுற்றிய திரைக்கதையைக் கொண்டிருக்கும் இத்திரைப்படம், விரைவில் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

x