நிஜமாகவே காலை உடைத்துக் கொண்டேன்!- ‘கர்ணன்’ ரஜிஷா விஜயன் கலகல பேட்டி


ரசிகா
readers@kamadenu.in

பாதி பத்மப்ரியா... மீதி வித்யா பாலன் என கலவையான தோற்றம் தந்து,  ரசிகர்கள் மனதில் தொற்றிக் கொண்டிருக்கிறார் ரஜிஷா விஜயன். ‘கர்ணன்’ படத்துக்காக கேரளம் கொட்டிக் கொடுத்திருக்கும் புதிய கதாநாயகி. சன் டிவியின் மலையாள சேனல்களான சூர்யா டிவி, சூர்யா மியூசிக் இரண்டிலும் தொகுப்பாளினியாக புகழ்பெற்று பின்னர் மலையாள சினிமாவில் அறிமுகமானவர். மலையாளத்தில் 10 படங்களைக் கடந்துவிட்ட ரஜிஷா, தமிழுக்கு கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் தனுஷ் - மாரிசெல்வராஜ் என்ற வெயிட்டான கூட்டணி வழியாக அடி வைத்திருக்கிறார். ‘கர்ணன்’ படத்தின் பரப்புரைக்காக தமிழகம் வந்திருந்த ரஜிஷா, ‘காமதேனு’ மின்னிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது.  

‘கர்ணன்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க மாரி செல்வராஜ் உங்களை அழைத்த போது, வீல் சேரில் வந்து அவரைச் சந்தித்தீர்களாமே... என்ன நடந்தது?

மலையாளத்தில்  ‘ஃபைனல்ஸ்’ என்றொரு ஸ்போர்ட்ஸ் டிராமா படம். அதில் சைக்கிளிஸ்ட்டாக நடித்தேன். அருண்.பி.ஆர். இயக்கிய படம். ஒரு லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்துப் பெண், ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள கடும் பயிற்சியில் ஈடுபடுகிறாள். எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி அவளது கனவு கலைந்துபோகிறது. அதிலிருந்து அவள் மேலே எழுந்துவர அவளுடைய அப்பா எப்படி உதவுகிறார் என்பது படம்.

x