சிவா எனக்கு கிடைத்த வரம்!- வாழ்க்கையை ரசித்து வாழும் லட்சுமி


பிரேமா நாராயணன்
premaa.narayanan@gmail.com

வயதின் எல்லைகளுக்குக் கட்டுப்படாத வசீகரம், அழகும் ஆதிக்கமும் மிளிரும் கம்பீரம், அன்பாக ஆணையிடும் இனிய குரல்… என்று எழுபதுகள், எண்பதுகள், தொண்ணூறுகளின் திரைப்படங்களில் வந்ததைப் போலவே அதே உற்சாகத்துடன் இருக்கிறார் லட்சுமி. திரையில் தலைமுறைகளைக் கடந்து இயங்கிவரும் ஆளுமை, பாலிவுட்டைப் பரவசப்படுத்திய தென்னிந்திய நடிகை, சின்னத்திரையிலும் முத்திரை பதித்த வித்தகி என்று லட்சுமியைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். சமீபகாலமாகத் தமிழ்த் திரையில் தரிசனம் தராத லட்சுமியை ‘காமதேனு’விற்காக நேரில் சந்தித்துப் பேசினேன்.

“பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையிலிருந்து சற்றே நிதானிக்கும் காலகட்டம் இது. எப்படி இருக்கிறீர்கள் மேடம்?” என்ற கேள்வியுடன் உரையாடலைத் தொடங்கினேன்.

மெல்லிய புன்முறுவலுடன் பேசத் தொடங்கினார்.

x