கமலை சந்திக்க காத்திருக்கிறேன்!- அவதாரத்தை மாற்றும் அமித் பார்கவ்


சா.மகிழ்மதி
readers@kamadenu.in

‘கல்யாணம் முதல் காதல் வரை’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய நெடுந்தொடர்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் தனி இடத்தை பிடித்தவர் அமித் பார்கவ். சமீபகாலமாகக் கண்ணில் படாத அமித், சிறு இடைவெளிக்குப் பிறகு கலைஞர் டிவியில் ‘கண்ணாடி’ எனும் சமூக நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வந்து கலக்கிக்கொண்டிருக்கிறார். இடைவெளிக்கு என்ன காரணம் என்று கேட்டால், சமீபத்தில் பிறந்த குட்டி மகளைக் காட்டிக் குதூகலிக்கிறார். அவருடன் ஒரு மினி பேட்டி:

 ஆக்டர் டூ ஆங்கர்... என்ன திடீர் மாற்றம்?

‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் முடிஞ்சப்பவே, அடுத்ததா சீரியல் பண்ண வேணாம்; சினிமாவுல கவனம் செலுத்தலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். சீரியல் பண்றப்ப நிறைய டைம் எடுக்குது. அதனாலயே பட வாய்ப்புகளை இழக்கிற மாதிரியாகிடுதுனு இந்த முடிவுக்கு வந்தேன். அந்தச் சமயத்துலதான், கலைஞர் டிவியில ‘கண்ணாடி’ ஷோ பண்றதுக்கு வாய்ப்பு வந்துச்சு. இந்த வாய்ப்பையும் தவிர்க்கலாம்னு நினைச்சேன். ஆனா, சீரியல் அளவுக்கு அதிக நேரம் எடுக்காதுன்னு கலைஞர் டிவியில சொன்னாங்க. இதுவரைக்கும் நானும் ஆங்கரிங் பண்ணினதில்லை. எதையும் புதுசா கத்துக்கிறதுல எனக்கு எப்பவுமே ஆர்வம் அதிகம். அதான் சரின்னு சொல்லிட்டேன்.

x