இது வடிவேல் சார் கொடுத்த வாழ்க்கை- நெகிழும் வெங்கல்ராவ்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

கலைஞனுக்கு மொழி ஒருதடை இல்லை என நிரூபித்தவர் வெங்கல்ராவ். தமிழும் தெலுங்கும் கலந்துகட்டி பேசும் வெங்கல்ராவ், அதையே தனக்கான அடையாளமாக்கி ரசிகர்களை சிரிக்கவைப்பவர். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் இவருக்கும் முக்கிய இடம் உண்டு. அதிலும் தலையில் இருந்து கையை எடுத்தால் சங்கை கடித்துவிடுவார் என வடிவேலுவும், வெங்கல்ராவும் சேர்ந்துசெய்த காமெடி கலட்டா கலக்கல் ரகம்!

சமீபத்தில் நெல்லை மாவட்டம், காவல்கிணறுக்கு இன்னிசை கச்சேரிக்காக வந்திருந்தார் வெங்கல்ராவ். “தமிழ்ப் பாட்டெல்லாம் பாடுவீங்களா?” என்று கேட்ட மறுநொடியே, “ கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி...’’ எனப் பாடவே ஆரம்பித்துவிட்டார். பாட்டுக்கு ஒரு பிரேக் போட்டுவிட்டு அவருடனான எனது பேட்டியை ஆரம்பித்தேன்.

உங்க இளமைக்காலம் பத்தி சொல்லுங்க...

x