என்னை செல்லப் பொண்ணா ஏத்துக்கிட்டாங்க!-‘மலர்’ சீரியல் ஜோடியுடன் ஜாலி சந்திப்பு


சா.மகிழ்மதி

சின்னத்திரை ரசிகர்களின் லேட்டஸ்ட் செல்ல ஜோடி மலர் – கதிர். கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘மலர்’ தொடரின் இந்த ஜோடியை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சந்தித்துவிடலாம் என்று சென்றிருந்தேன். இருவரும் நடந்துகொண்டே சீரியஸாக டயலாக் பேசிக்கொண்டிருக்க, திடீரென “கட்! கட்!” என்று குரல் கொடுத்த இயக்குநர் ஜெய் அமர் சிங், “ஒரு பத்து நிமிஷம் பிரேக்” என்று ஸ்பாட்டைவிட்டு நகர்ந்தார். சைக்கிள் கேப்பில் சந்திப்பைத் தொடங்கினேன்.

மலர் பாத்திரத்தில் நடிப்பவர் நயனா ஷெட்டி.  சற்றே வட இந்திய சாயல், இதழை விட்டு அகலாத புன்னகை என்று அசத்தும் அழகி. போலீஸ் மிடுக்கும் புது மாப்பிள்ளை மினுக்குமாகக் கலக்குறார் ‘கதிர்’ அருண் பத்மநாபன்.

லேடீஸ் ஃபர்ஸ்ட்டல்லவா? முதலில் நயனா.

x