பட்டா பட்டி... படக்குனு லுங்கி!- கலகல ஷூட்டிங்கில் நிக்கி கல்ராணி


கா.சு.வேலாயுதன்

அவுட்டோரே வர மாட்டேங்கிறாங்க... என்று வெகு காலமாக எதிர் பார்த்துக்கொண்டிருந்த பொள்ளாச்சி, சினிமாக்காரர்களின் வருகையால் மெதுவாக சோம்பல் முறிக்க ஆரம்பித்திருக்கிறது. சிங்கநல்லூர் அரண்மனை, பொள்ளாச்சி வயல் வெளிகள், நகரப்பகுதிகள் எனக் கடந்த ஒரு மாதமாக சசிகுமார், நிக்கி கல்ராணி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது.

நகராட்சி அலுவலகம் எதிரேயுள்ள ஒரு கட்டிடத்தில், ‘பொள்ளாச்சி காவல்நிலையம்’ பெயர்ப் பலகை தொங்கியது. அதன் உள்ளே இருந்து ‘கும்மாங்குத்து’ சத்தம் கேட்கிறது. தொடர்ந்து ‘‘அய்யோ, அம்மா, அடிக்காதீங்க... அடிக்காதீங்க..!’’ குரல். அறைக்கு முன் வாசலில் ரோஸ் கலர் சுடிதாரில், பச்சை கலர் துப்பட்டாவை ஒதுக்கியபடி டக், டக்கென இரண்டு ஸ்டெப்கள் நடந்து வந்து ஒரு கணம் நிற்கும் நிக்கி, ‘‘நிறுத்துங்க, என் அப்பாவை ஏன் அடிக்கறீங்க?’’ எனக் கேட்டுவிட்டு வேகமாக உள்ளே நுழைகிறார்.

“கட், கட்...!” குரல் ஒலிக்கிறது. ஒன்ஸ்மோர் சொல்கிறார் டைரக்டர். இப்படியே ஐந்து முறை கட் சொல்லி ஆறாவது  டேக்கில் ஓகே ஆகிறது. உள்ளே இருந்து பட்டா பட்டி ட்ரவுசருடன் வெளியே வரும் தம்பி ராமய்யா, உதவியாளரிடம் லுங்கியை வாங்கி இடுப்பில் இழுத்துக் கட்டுகிறார்.

x