தோல்விகளில் இருந்து மீண்டு வந்திருக்கிறேன்- ‘கழுகு 2’ சத்யசிவா நேர்காணல்


இர.அகிலன்

வெறிச்சோடிய தெருக்களில், காலைப் பனிக்கு பயந்து முந்தின இரவிலேயே வாசலில் பெண்கள் கலர் பொடிகளைத் தூவி கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கலர் பொடிகளுக்குத் தப்பிய மிச்ச சொச்ச பேரும், டிவி-யில், பொங்கல் ஸ்பெஷலாக இயக்குநர் மகேந்திரனை விஜய் ‘தெறி’க்க விடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் பேட்டிக்காக வளசரவாக்கத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். 

விலாசம் தேடுகிற சிரமத்தைக் கொடுக்காமல், அலுவலக வாசலிலேயே வீரப்பனை நினைவுபடுத்துகிற உடை, கைகளில் துப்பாக்கி சகிதம் நடிகர் கிருஷ்ணாவும், கண்களாலேயே பேசிக்கொண்டிருந்த பிந்துமாதவியும் பெரிய பெரிய போஸ்டர் டிசைன்களில் சிரித்தபடியே வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். 

சிவப்பேறிய கண்களுடன் ‘கழுகு2’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் மும்முரமாய் இருந்தார் இயக்குநர் சத்யசிவா. தன் அறிமுகப் படமான ‘கழுகு’வில் கவனம் ஈர்த்தவர், மீண்டும் கிருஷ்ணா- பிந்துமாதவி ஜோடியுடன் ‘கழுகு2’ மூலம் களம் இறங்குகிறார். அவருடன் உரையாடியதிலிருந்து...
 
‘கழுகு’ படத்துக்குப் பிறகு பெரிசா எந்த ஹிட் படமும் கொடுக்கலையே?

x