அதிர்ஷ்டக்காரப் பொண்ணு நான்!


இர.அகிலன்

சென்னையைச் சுற்றும் காற்று மாசைப் பற்றிய கவலையோடு பூந்தமல்லியில் இருக்கிற கோகுலம் ஸ்டுடியோவுக்குச் சென்றால், “சென்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று ஃபுல் மேக்-அப்பில் சிரிக்கிறார் ‘வந்தாள் ஸ்ரீதேவி’ சீரியலின் நாயகி அனன்யா. கலர்ஸ் டிவியில் வரும் இந்தத் தொடரில், தொட்டதெல்லாம் துலங்க வைக்கும் அதிர்ஷ்டக்காரப் பெண்ணாக நடிக்கிறாராம்.

சீரியல் வாழ்க்கை எப்படிப் போகுது?

செம த்ரில்லிங்கா இருக்கு. ‘வந்தாள் ஸ்ரீதேவி’யில் ஒரு சின்ன டவுன்ல இருக்கிற பொண்ணுதான் ஸ்ரீதேவி. அவளுடைய குடும்பத்தினர் அவளைக் கட்டாயப்படுத்தி, பிடிக்காத மாப்பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நினைப்பாங்க. அதிலிருந்து அவள் எப்படி மீள்கிறாள் என்பதுதான் கதை. கதைப்படி என்னை, ரொம்ப அதிர்ஷ்டக்காரப் பொண்ணுன்னு ஊரே கொண்டாடும். அதனால, ‘ரெடி... டேக்’னு சொன்னதுக்கப்புறமா செட்ல ஒரே பாச மழைதான். நிஜமாவே நான் கிராமத்துல இருந்து வந்த பொண்ணு. அதனால கதையை உள்வாங்கி நடிக்கிறதுக்கு ரொம்ப ஈஸியா இருக்கு. ஷூட்டிங் டைம்ல நானும் சில சீன்ஸ் எல்லாம் சொல்வேன்னா பார்த்துக்கோங்களேன்.

x