சென்னை எனக்குப் பழகிடுச்சு! - படபடக்கும் பட்டாம்பூச்சி ஸ்ரேயா!


நா.இரமேஷ்குமார்

சன் டிவி-யில் ‘நந்தினி’ தொடரில் காயத்ரியாக வலம் வரும் ஸ்ரேயா, இப்போது கலர்ஸ் டிவி-யில் ‘திருமணம்' சீரியலிலும் நடிக்கிறார். “சென்னை சூப்பரா இருக்குது. தமிழ் மக்களும் என்கிட்ட நிறைய அன்பு காட்டறாங்க.” என்று உற்சாகமாய்ப் பேசுகிற ஸ்ரேயாவை, ‘திருமணம்’ ஷூட்டிங்கில் சந்தித்தேன்.

ஸ்ரேயா சுயகுறிப்பு தரலாமா..?

என்னோட பூர்வீகம், மங்களூரு. இப்போ பெங்களூருவில் வசிக்கிறேன். ஒரு தங்கை. படிச்சுக்கிட்டிருக்கா. கதக், கிளாசிகல்னு டான்ஸ்ல ரொம்ப ஈடுபாடு. நான் பி.காம்., ஃபைனல் இயர் படிச்சுட்டுருந்தபோது நடிக்க வாய்ப்பு வந்துச்சு. அதுக்கு முன்னாடி நடிக்கும் எண்ணம் இல்லை. கன்னடத்தின் ‘அரமனே’ சீரியல் கேரக்டரை கேட்டதுமே பிடிச்சுப்போனதால், அதில் ஹீரோயினா நடிச்சேன். ஒருகட்டத்தில் ஆக்டிங் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அடுத்து, ‘ஒந்து மொட்டெயா கதே’ என்ற கன்னட படத்தில் நடிச்சேன். துளு மொழியில் ரெண்டு படத்தில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். தமிழ் சீரியல்ல ‘நந்தினி’க்கு அப்புறம் இப்ப ‘திருமணம்’ சீரியல்.

x